சனி, 4 செப்டம்பர், 2010

எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து ................


Share

எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “ என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
எம் பேரு ஞாபகமிருக்கா என கேட்டு விடுவானோ ?
அப்பப்போ
போன் பண்ணுடா
எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு
கண்டிப்பா என நகர்வான், நான் கொடுக்காத நம்பரை
அவன்
எழுதிக் கொள்ளாமலேயே.
பொய்கள் தான்
உண்மையாகவே
நட்பைக் காப்பாற்றுகின்றன.
நேற்று கூட பேச நினைத்தேன் என
யாரோ பேசிக் கடக்கிறார்கள்
செல்போனில்
அவளா இது ? மீன் வாங்கிச் செல்லும்
பெண்ணிடம்
கொஞ்சமும் மிச்சமில்லை
கால் நூற்றாண்டுக்கு முன்
கண்களில் சிரித்த வசீகரம்.
நட்பு இருப்பதாய்
சொல்லிக் கொள்ளவேனும்
அடிக்கடி
தேவைப்படுகின்றன
வெள்ளிக்கிழமை பார்கள்.
கிராமத்து மௌன வீட்டின்
கம்பி அளியின் ஊடாக
நண்பனின்
புன்னகை முகம் தெரிகிறது. இறந்து
வெகு நாட்களான பின்னும்.
ஏழாயிரம் சம்பளம் டா மச்சி என
குதூகலித்துச் சொல்லும் நண்பனிடம்
சொன்னதில்லை
பல மடங்கு வாங்கும் நான். அவனிடம் மிகுந்திருக்கிறது நட்பு.
யாரை ரொம்பப் பிடிக்கும் ?
எதிர்பார்ப்புடன்மகளைக் கொஞ்சுகையில்,
தோழியின் பெயரைச் சொல்லி
நட்பைப் பெருமைப்படுத்துகிறது
நர்சரி !............

கனவில்.............

பெரிய வீடு வாங்க 
வேண்டும்
கார் வாங்க வேண்டும்
நிலம் வாங்க
வேண்டும்

என நினைக்கையில்
மனைவி கேட்டாள்:
காலையில் பால்
பாக்கட் வாங்க வேண்டும்
காசு இருக்கா?
கனவில் கூடவா?
எல்லோருக்கும்
நாளையிலிருந்து 
வேலையில்லை
என்றுச் சொன்னார்
அந்த ஐடி கம்பனி
மேலாளர் தன்
வேலையும் சேர்ந்து
போனது
தெரியாமல்.
கெட்டி மேளச்சத்தம்
பட்டு சேலைகளின்
சரசரப்பு
மணவரையில் மகள்
மாங்கல்யம் தந்துனா...
அப்பாடா ஒரு பிரச்சனை
முடிந்து போனது என
நினைத்தார் அப்பா
கூடவே அவள் சுதந்திரமும்
முடிந்து போனது
தெரியாமல்.

அதிக பின்னூட்டம்
வரவில்லையென்று
கணணியை திறந்து
பார்த்துக்கொண்டே
இருந்தான் அவன்.
கணணி மொளன
மொழியில் அவனைப்
பார்த்து சொன்னது
'
என்னை திறந்து
திறந்து பார்க்கும் 
நேரத்தில் உன்னை,
உன் பதிவுகளை
திரும்பிப் பார்
நீயே இட மாட்டாய்
பின்னூட்டம்'.........

வெள்ளி, 16 ஜூலை, 2010

மண்ணில் சொர்க்கம்...................?




சொர்க்கம் என்பது எங்கே உள்ளது
சொலவா முடியாது
நற்கரு ணையுடன் மானுடம் நடந்தால்
நமைவிட மேல் ஏது



மண்ணில் தெரியுது சொர்க்கம் காண
மானுடரே வாங்க
கண்ணில் தெரியும் காட்சியை விட்டுக்
கதைகள் ஏன் போங்க



பகைவனை மோதிச் சுட்டுவி டாமல்
பாசம் பொழியுங்க
புகைச்சல் மறந்து புறப்பட்டு வாங்க
போரை அழியுங்க



எல்லா மனிதரும் கோட்டின்  பிள்ளை
என்றால் ஏன் சண்டை
வல்லான் இல்லான் என்றில்லாமல்
வசிப்போம் ஊராண்டை



காலையிற் பகைவனைத் தியானம் செய்க
காதலில் ஆழ்ந்திடுக
மாலையில் அவனே மயங்கிச் சிரிப்பான்
மனம்போல் வாழ்ந்திடுக



உர்ரென மூஞ்சியை வைக்க தீங்க
உடனே சிரியுங்க
விர்என வெளியே வாங்க அங்கே
விண்ணைப் பிடியுங்க



சண்டை களுக்குள் நேரம் தொலையுது
சவத்தைத் தள்ளுங்க
அண்டை களுக்குள் அன்பைத் தெளிங்க
அனுபவம் கொள்ளுங்க



மனிதர்எல் லோரும் மனுவின் பிள்ளை
மறுபடி ஏன் சண்டை
பனிமனி தர்முதல் புனிதர்க ளோடு
பழகுக வீட்டாண்டை



புத்தன் ஏசு போதித் தார்கள்
போற்றுக நற்றொண்டை
நித்தம் நித்தம் முழக்குக முழக்கி
நெகிழுக நம் தொண்டை



நாம் எல்லோரும் நபியின் பிள்ளை
நமக்குள் ஏன் சண்டை
பூமியிற் போர்கள் முடிந்தன முடிந்தன
போனது நாள் பண்டை



மானுட சக்தியின் மகத்துவம் கேட்க
மக்காள் வாருங்க
தேனிடம் இனிமை கேளுங்க கொட்டும்
தேளிடம் ஏனுங்க



அலுவல கத்தில் பாஸ்மேல் கொஞ்சம்
அன்பைத் தெளியுங்க
கலகலப் பாகப் பேசுங்க சிரிப்பில்
காதலைப் பிழியுங்க



குழந்தைகள் டீவியைக் காதலித் தால்அக்
குற்றம் உமதுங்க
வழிந்தே பாசம் பொழிந்தால் அந்த
வகையும் உமதுங்க



கவனம் கண்ணை மூடுங்க உள்ளக்
கதவைத் திறவுங்க
நவநவமான உலகம் உமக்கே
நட்பாய்ப் பரவுங்க



மனைவியின் முகத்தை பிடியுங்க அவளை
மனம் போல் சுத்துங்க
கனிவாள் உமையே கவனிப் பாள் எனில்
கவலைகள் வெத்துங்க.........

காத்திபவை....?????



விடியலை எதிர்ப்பார்த்து 
காத்திருக்கும் 
மொட்டுக்கள் ! 

சூரியனை எதிர்ப்பார்த்து 
காத்திருக்கும் 
பனித்துளிகள் ! 

காற்றை எதிர்ப்பார்த்து 
காத்திருக்கும் 
மரங்கள் ! 

இறையை எதிர்ப்பார்த்து 
காத்திருக்கும் 
பறவைகள் ! 

இவையாவும் 
தவறவிடுவதில்லை 

மனிதனைப் போல் 

வாய்ப்பை ................?

பக்கங்கள்

toolbar powered by Conduit