சனி, 4 செப்டம்பர், 2010

கனவில்.............

பெரிய வீடு வாங்க 
வேண்டும்
கார் வாங்க வேண்டும்
நிலம் வாங்க
வேண்டும்

என நினைக்கையில்
மனைவி கேட்டாள்:
காலையில் பால்
பாக்கட் வாங்க வேண்டும்
காசு இருக்கா?
கனவில் கூடவா?
எல்லோருக்கும்
நாளையிலிருந்து 
வேலையில்லை
என்றுச் சொன்னார்
அந்த ஐடி கம்பனி
மேலாளர் தன்
வேலையும் சேர்ந்து
போனது
தெரியாமல்.
கெட்டி மேளச்சத்தம்
பட்டு சேலைகளின்
சரசரப்பு
மணவரையில் மகள்
மாங்கல்யம் தந்துனா...
அப்பாடா ஒரு பிரச்சனை
முடிந்து போனது என
நினைத்தார் அப்பா
கூடவே அவள் சுதந்திரமும்
முடிந்து போனது
தெரியாமல்.

அதிக பின்னூட்டம்
வரவில்லையென்று
கணணியை திறந்து
பார்த்துக்கொண்டே
இருந்தான் அவன்.
கணணி மொளன
மொழியில் அவனைப்
பார்த்து சொன்னது
'
என்னை திறந்து
திறந்து பார்க்கும் 
நேரத்தில் உன்னை,
உன் பதிவுகளை
திரும்பிப் பார்
நீயே இட மாட்டாய்
பின்னூட்டம்'.........

பக்கங்கள்

toolbar powered by Conduit