வெள்ளி, 16 ஜூலை, 2010

மண்ணில் சொர்க்கம்...................?




சொர்க்கம் என்பது எங்கே உள்ளது
சொலவா முடியாது
நற்கரு ணையுடன் மானுடம் நடந்தால்
நமைவிட மேல் ஏது



மண்ணில் தெரியுது சொர்க்கம் காண
மானுடரே வாங்க
கண்ணில் தெரியும் காட்சியை விட்டுக்
கதைகள் ஏன் போங்க



பகைவனை மோதிச் சுட்டுவி டாமல்
பாசம் பொழியுங்க
புகைச்சல் மறந்து புறப்பட்டு வாங்க
போரை அழியுங்க



எல்லா மனிதரும் கோட்டின்  பிள்ளை
என்றால் ஏன் சண்டை
வல்லான் இல்லான் என்றில்லாமல்
வசிப்போம் ஊராண்டை



காலையிற் பகைவனைத் தியானம் செய்க
காதலில் ஆழ்ந்திடுக
மாலையில் அவனே மயங்கிச் சிரிப்பான்
மனம்போல் வாழ்ந்திடுக



உர்ரென மூஞ்சியை வைக்க தீங்க
உடனே சிரியுங்க
விர்என வெளியே வாங்க அங்கே
விண்ணைப் பிடியுங்க



சண்டை களுக்குள் நேரம் தொலையுது
சவத்தைத் தள்ளுங்க
அண்டை களுக்குள் அன்பைத் தெளிங்க
அனுபவம் கொள்ளுங்க



மனிதர்எல் லோரும் மனுவின் பிள்ளை
மறுபடி ஏன் சண்டை
பனிமனி தர்முதல் புனிதர்க ளோடு
பழகுக வீட்டாண்டை



புத்தன் ஏசு போதித் தார்கள்
போற்றுக நற்றொண்டை
நித்தம் நித்தம் முழக்குக முழக்கி
நெகிழுக நம் தொண்டை



நாம் எல்லோரும் நபியின் பிள்ளை
நமக்குள் ஏன் சண்டை
பூமியிற் போர்கள் முடிந்தன முடிந்தன
போனது நாள் பண்டை



மானுட சக்தியின் மகத்துவம் கேட்க
மக்காள் வாருங்க
தேனிடம் இனிமை கேளுங்க கொட்டும்
தேளிடம் ஏனுங்க



அலுவல கத்தில் பாஸ்மேல் கொஞ்சம்
அன்பைத் தெளியுங்க
கலகலப் பாகப் பேசுங்க சிரிப்பில்
காதலைப் பிழியுங்க



குழந்தைகள் டீவியைக் காதலித் தால்அக்
குற்றம் உமதுங்க
வழிந்தே பாசம் பொழிந்தால் அந்த
வகையும் உமதுங்க



கவனம் கண்ணை மூடுங்க உள்ளக்
கதவைத் திறவுங்க
நவநவமான உலகம் உமக்கே
நட்பாய்ப் பரவுங்க



மனைவியின் முகத்தை பிடியுங்க அவளை
மனம் போல் சுத்துங்க
கனிவாள் உமையே கவனிப் பாள் எனில்
கவலைகள் வெத்துங்க.........

காத்திபவை....?????



விடியலை எதிர்ப்பார்த்து 
காத்திருக்கும் 
மொட்டுக்கள் ! 

சூரியனை எதிர்ப்பார்த்து 
காத்திருக்கும் 
பனித்துளிகள் ! 

காற்றை எதிர்ப்பார்த்து 
காத்திருக்கும் 
மரங்கள் ! 

இறையை எதிர்ப்பார்த்து 
காத்திருக்கும் 
பறவைகள் ! 

இவையாவும் 
தவறவிடுவதில்லை 

மனிதனைப் போல் 

வாய்ப்பை ................?

நட்பின் இடைவெளி ......................



ள்ளி பருவத்தில் உன்னுடன் 
கைகோர்த்து சென்றுயிருக்கிறேன் 
பண்டம் மாற்று முறை போல் 
நாம் மதிய உணவை மாற்றியிருக்கிறோம் 

இரவு கண் விழித்து 
நாம் வேலைகளை 
நீயும்,நானும் 
மாற்றி செய்துயிருக்கிறோம் 

கல்லூரி பருவத்தில் 
நாம் நட்பை,காதலாக 
கருதிய அனைவருக்கும் 
புரியவைத்தோம் 
நாம் இருவரும் நல்ல நண்பர்கள் 
மட்டுமே என்று 

கல்லூரி முடிந்து,விட்டுக்கு 
செல்லலும் பொழுதிலும் 
எனக்காக காத்து இருந்து,என்னை 
பாதுகாத்து என் தெருவில் 
விட்டு விட்டு சென்று இருக்கிறாய் ; 

முதல் முறையாக 
உன்னை என் அன்னைக்கு 
அறிமுகம் செய்த பொழுதில் கூட 
என் அன்னையின் கண்களியில் 
தெரிந்த கலக்கத்தை போக்கும் 
விதமாக கூறினேன் 

என் அன்னையிடம் 
"இவன் உனக்கு எப்பொழுதும் 
மருமகன் ஆக முடியாது" 
ஏன் என்றால் 
"இவன் எனக்கு நிச்சயக்கப்பட்டா 
நண்பன் " என்று 

உன்னுடன் உன் வண்டியில் 
அமர்ந்து வந்த பொழுது எல்லாம் 
வேகம் இல்லாமல் ; 
மற்றவர் கண்களுக்கு 
நாம் நண்பர்களாக 
தெரியும் விதத்தில் 
அழைத்து சென்றாய் என்னை 

இதோ ! 
இன்று என் திருமண நாள் 
உறவுகள் அனைத்தும் 
சந்தோஷத்தில் இருக்க ; 

மேடையில் 
நானும்,என் வாழக்கை துணையும் 
நிற்க , 

என்னை நோக்கி வந்தாய் 
என் துணையிடம் 
வாழத்துக்கள் கூறி 

புகைப்படத்திற்கு நின்றாய் ,அவனுடன் 

கோபம் கண்ணில்;மனதில் குழப்பம் 
இத்தனை நாள் இல்லாத 
இடைவெளி ! ஏன் இன்று ? 

நீ சென்ற பிறகு கூறினான் 
என் துணை 
உன் தோழன் அழுகிறான் என்று 

நாம் எடுத்து கொண்ட 
புகைப்படத்தில் 
நீ என்னை 
பார்க்க 
நான் உன்னை 
பார்க்க 

இது தான் 
நட்பின் இடைவெளியா ...........................? 

வியாழன், 15 ஜூலை, 2010

வெற்றி



xU kzpj;Jsp rpe;jpj;Jg;ghh;
eP ahUf;fha; vjw;fha;
tho;fpwha;? ePgl;L nkj;ijapy;
cwq;Fifapy; ciog;G
cd; clypNy
cwq;FfpwJ………………!
#o;epiy>tWik
mq;ftPdk;> vjphpfs;
,it vy;yhk;. Cd; Kaw;rpf;F
Jilf;fy my;y Cd; kdNk
Cdf;Fj;jjil……………!
gdpj; Jspf;Fs; vup kiyiaj; NjL
vupkiyf;Fs;
gdpj;Jspiaj; NjL…………!
njhiyfhl;rpg; ngl;bf;Fs;
njhiye;J fplf;fhNj
Cd;fhjf;fha;
fbfhuk; epd;W tplhJ…………………!eP
tpopg;Gydw;wtdh?
,Ul;il Nerp
Xsp fpilf;Fk;…………………..eP
nrtpg;Gydw;wtdh?
mikjpia Nerp
Xirfs; fpilf;Fk;………….!eP
Cikah?
fhl;rpia Nerp
thu;j;ijfs; fpilf;Fk;.
kpfg; nghpa rhjidfs;
rhjpf;fgLtJ.
Typikdhy; my;y
tplhKaw;rpapdhy;………….?
rpNefpjh
Nghdij tpl;Ltpl;L
tUtijj; jLj;J
epWj;J
,d;Ww NghuhL
ehis nfhz;lhL………………………?

பகல்கனவு .....................

வீதியில் கண்விழித்த
கல் ஒன்ரு
என் பார்வையில்
தைத்தது

என் இருவிழியும்
சுழலவில்லை
பார்வை நின்றது

தங்கமோ வைரமோ
என என்னுள்ளம்
பதைத்தது

வீதிவழி
நோட்டம் விட்டு
வீடுவரை
வந்துவிட்டேன்

கனவுப்பூக்களை
உதிர்த்துக்கொண்டே

விடிந்தது
நம்வாழ்க்கை
விழித்த
கல் ஒளியில்

என விழுந்து
கண்முழித்தேன்
விடியல் முடிந்து.

புதன், 14 ஜூலை, 2010

அழகி................


அழகிய ரோஜாப் பூ போல்
ஏன் வாடமல் இருக்கிறாய்?
நான் உன்னைக் காதலிப்பதால்
உன் முகம் வாடவில்லையோ....
உன் முகம் மட்டும் தினம் தினம் எப்படி மலர்கிறது
அந்த ரகசியத்தை எனக்கு சொல்வாயா?....
நானும் உன்னைப் போல்
மலர்ந்து கொண்டே இருக்க.
மலர்களைக் காட்டிலும் உன் வாசம்தான்
என்னைக் கொல்கிறது.
பூக்கள்தான் முதல் அழகி என நான் நினைத்தேன்...
உன்னைப் பார்த்தபின்தான் தெரிந்தது....
என்றாவது ஒரு நாள் பூக்கள் வாடி விடும்.
உன்முகம் மட்டும் தான் வாடுவதில்லை.
பூக்களை விட சிறந்த அழகி நீதான் என்று!.

தூக்கத்தில் என்னைக் கொல்வதற்காக
பிறந்தவளே...........
உன் அழகைக் கண்டு
பொறாமைப் படுகிறேன்!.............

செவ்வாய், 13 ஜூலை, 2010

நட்பு தேவை..................

மாற்றம் நிறைந்த
இந்த உலகத்தில்
மாற்றமே இல்லாமல்
வாழ்ந்திட ஆசை
என்றும் நான்
உன் தோழியாக
நீ என் தோழனாக
,U.........................

உன் நினைவுகள்.......................

உன்னை நினைத்து
இரவு முழுதும்
அழுது முடித்து
உறுதியாய்த்
தீர்மானித்தேன்
உன்னை மறந்து
விடுவதென்று!

உன் நினைவுகளை எங்கேனும்
தொலைத்து விடலாமென
அழுதுகொண்டு
அழைத்துக்கொண்டு
கிளம்பினேன்...

திரையரங்கில்..
நூலகத்தில்..
புத்தக இடுக்கில்..
பேருந்தில்..
அலுவலகத்தில்..
சாலையில் பார்த்த
குழந்தையின் சிரிப்பில்...

எங்கே தொலைப்பதென
அலைந்து திரிந்து
மீண்டும் வீட்டிற்குத்
திரும்பினேன்.

செருப்புகளைக் கழற்றுகையில்
உறைத்தது!
உன் நினைவுகளைக் காணவில்லை!!

மகிழ்ச்சியாய் நுழைந்து
படுக்கையறையைத் திறந்தேன்

அங்கே...
அலைந்த களைப்பில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
என் கட்டிலில் படுத்து
உறங்கிக் கொண்டிருந்தன
உன் நினைவுகள்!

நட்பா? காதலா?

நட்பு பெரிதா ? காதல் பெரிதா ?
நண்பன் கேட்டான்

நான் முதலில் கற்றுக் கொண்டது
நட்பு தான்

நான் இது வரையில் காத்து வருவது
நட்பு தான்

என்னை நானாக பார்த்தது
நட்பு தான்

காதலின் இனிமையான பாகம்
நட்பு தான்

எனினும்
எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
நட்பு
தான்.

நிலவாக இருந்து ..........

ஞாயிறு, 11 ஜூலை, 2010

நட்பு



நினைத்திரு.... மறந்திரு..

..

நினைவாகவே இருக்கிறேன்
நினைவுகளோடு நடமாடுகிறேன்
நினைக்காமலே இருந்து விடாதே
நினைவு கூர் எப்போதாவது

மறந்திரு..... எப்போதும்
நினைத்திரு.... எப்போதாவது
உணர்ந்திடுவேன் அப்போது
உயிருடன் தொடர்ந்தால்

அன்பே மன்னித்து விடு என்னை
அனுமதியின்றி உன்னுள் நான்
நுழைந்து விட்டேன் - தயவாய்
அன்பு காட்டு என் மீது

போதும் எனக்கு உன்
உண்மை அன்பு மட்டும்
என் உயிர் உள்ள நாள் வரை
கொடுப்பாயா உன் தூய அன்பை

வேண்டாம் எனக்கு அன்பன்றி எதுவும்
வேண்டுகிறேன் உன்னிடம்
அன்பாக என்னுள் இணைவாயா என்று


பக்கங்கள்

toolbar powered by Conduit