ஞாயிறு, 11 ஜூலை, 2010

நினைத்திரு.... மறந்திரு..

..

நினைவாகவே இருக்கிறேன்
நினைவுகளோடு நடமாடுகிறேன்
நினைக்காமலே இருந்து விடாதே
நினைவு கூர் எப்போதாவது

மறந்திரு..... எப்போதும்
நினைத்திரு.... எப்போதாவது
உணர்ந்திடுவேன் அப்போது
உயிருடன் தொடர்ந்தால்

அன்பே மன்னித்து விடு என்னை
அனுமதியின்றி உன்னுள் நான்
நுழைந்து விட்டேன் - தயவாய்
அன்பு காட்டு என் மீது

போதும் எனக்கு உன்
உண்மை அன்பு மட்டும்
என் உயிர் உள்ள நாள் வரை
கொடுப்பாயா உன் தூய அன்பை

வேண்டாம் எனக்கு அன்பன்றி எதுவும்
வேண்டுகிறேன் உன்னிடம்
அன்பாக என்னுள் இணைவாயா என்று


பக்கங்கள்

toolbar powered by Conduit